Skip to main content

உறவுகளே! (கட்டளைக் கலித்துறை) - போட்டிக்காக

உறவுகளே!

(கட்டளைக்கலித்துறை)

1.
உறவா யிருந்தாலும் உண்மையி லேநெஞ்சைப் பூட்டிவைத்து
திறவா திருப்போரின் தீதுறவை யிங்கே சுற்றமெனப்
பெறவா பிறப்பு பெரியோனே உன்னருட் பார்வையென்னில்
வரவா யிருந்தால் வழுவா(து) இனிக்கும் உறவுகளே!

2.
வாழ்ந்தால் நமையே வரவேற்கச் சொந்தம் பலவிருக்கும்
தாழ்ந்தால் அவையே தகையாய்க் கரம்பற்றித் தோள்தருமா?
வீழ்ந்தால் விலகிச் செல்லாமல் தூக்கிடுமா? சற்றெனவே
ஆழ்ந்தால் இனங்கண்(டு) அருகில் நிலைக்கும் உறவுகளே!

3.
பேசும் வரிகளில் பொற்பூச்சுக் கூட்டிச் சிலமனிதர்
வீசும் வலைக்குள் விழுந்தால் சிலநேரம் சிந்தைமிகக்
கூசும் தெரியாதா கூர்ப்பு மதியோரைக் கூடவீழ்த்தி
காசும் பெரிதாகக் கூட்டைக் கலைக்கும் உறவுகளே!

4.
ஓட்டங் குலுக்க வொருவெட்டிப் பேச்சால் செவிப்பறையில்
காட்டங் கொடுத்துக் கதைபேசி, கண்ணயர் நேரமதில்
வாட்டங் கொடுக்க வமர்ந்தோர் சிலர்முன் னிருக்கையினில்
ஆட்டங் கொடுக்கும் (இ)ரயிலில் அமையும் உறவுகளே!

5.
கவிக்கும் கலைக்கும் கடனாக வேனும் பொழுதொதுக்கித்
தவிக்கும் நிலையில் அவசர மின்னஞ்சல் கோத்தெழுதி
புவிக்குள் இணையப் புதுமை பழகி மனம்நிறைத்து
செவிக்குள் இசையாகச் சேர்ந்து சிறக்கும் உறவுகளே!

6.
காலை உறக்கம் கலைந்த நொடியோடோ டித்தினமும்
வேலைப் பளுதூக்கி வெற்றிக் கனிபறிக்க மூச்சிரைத்து
ஆலைத் துரும்பாய் அகத்தில் நிறங்கொண்டு வீடுவந்தால்
சோலைக் குளிரின் சுகத்தைச் சுரக்கும் உறவுகளே!

7.
தேனீர் குடித்துத் தெவிட்டாப் புகையுடன் எப்பொழுதும்
வாநீ யெனுமொழி கேட்டு மகிழ்வில் அளவளாவி
தாநீ யெனநட்பைக் கேட்டுப் பெறுகின்ற நல்லவரைக்
காணீ ரெனச்சொல்வேன் கண்டால் தழைக்கும் உறவுகளே!

8.
என்றோ மனதை யிழுத்த கடைக்கண்கள் என்னிதயத்(து)
இன்றோ வெழுந்து இயைந்து விளையாடி நிம்மதியைக்
கொன்றோ குவிக்கும் எனும்வினா தூக்கங் கலைத்தழித்து
நன்றோ கனவில் நனவைச் சிதைக்கும் உறவுகளே?

9.
தாவணி பின்னே தனிப்பாத் திரட்டு புதுக்கவிதை
பூவணிப் பின்னல் இடையாடும் சந்தத்தில் சொற்சிலம்பில்
பாவணி செய்த பருவத் துணையானோர் கூட்டுறவில்
நாவணி செய்யுங் குறும்பினில் நாணும் உறவுகளே!

10.
எத்தனை இங்கே கவிவார்த்(து) அளித்தாலும் ராத்திரியில்
பித்தனைப் போல எழுத்தெண்ணி யிங்கே கலித்துறையில்#
அத்தனை அள்ளிக் குடித்தாலும் தேன்கூட்டில் வாக்கெனவே
மொத்தமாய் ஐந்து விழுந்தாலும் போதும், உறவுகளே! :)))

# கட்டளைக்கலித்துறையென்று பொருள்கொள்ள வேண்டுகிறேன்.

*

கட்டளைக் கலித்துறையின் இலக்கணம்:

அ. வெண்டளை

ஆ. நான்கு அடிகள்

இ. ஒவ்வோர் அடியிலும் ஐந்து சீர்கள்

ஈ. அடிகளின் கடைசிச் சீரின் அமைப்பானது கருவிளங்காய் அல்லது கூவிளங்காய்

உ. நான்காம் அடியின் கடைசிச் சீர் 'ஏ' என ஒலிக்கவேண்டும்.

ஊ. அடிகளை நிரையசையில் துவங்கினால் ஒற்றெழுத்து நீங்கலாக ஒவ்வோர் அடியிலும் பதினேழு எழுத்துகள் இருக்கவேண்டும்.

எ. அடிகளை நேரசையில் துவங்கினால் ஒற்றெழுத்து நீங்கலாக ஒவ்வோர் அடியிலும் பதினாறு எழுத்துகள் இருக்கவேண்டும்.

*

கட்டளைக்கலித்துறைக்குப் புதியவர்கள் தயைகூர்ந்து ஆதிபராசக்தி திரைப்படத்தின் 'சொல்லடி அபிராமி' பாடலின் தொகையறாவைச் சற்று நினைவுபடுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் அணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கழ கே!அணு காதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெறுவிருந்தே!
பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே!

(ஹரியண்ணாவுக்கும் மரத்தடி டாட் காமிற்கும் நன்றிகள்)

*****

அன்புடன்
ஆசாத்

Comments

Unknown said…
அசத்துறீங்க ஆசாத் அண்ணா...
இனிய தேவ்,

நன்றிகள்.

*

எகிப்திய முகத்தை முன்அட்டையில் கொண்ட 'சிற்பியே உன்னைச் செதுக்கிறேன்' எனக்கும் பிடிக்கும்.

இழைக்குத் தொடர்பில்லாத புதுக்கவிதைதான், சிற்பி தொடர்பானதென்பதால் எழுதுகிறேன்.

*

உளி

யாருக்கோ வடிவம் கிடைக்க
தினமும்
தன் மண்டையில்
அடிவாங்கிக்கொண்டு...

*

அன்புடன்
ஆசாத்
Thottarayaswamy said…
good one...plz see my blog ..www.pagadai.blogspot.com
ஓகை said…
ஒருவாக்கும் உண்டே உமதான வாக்கு நடவரசன்
தருவாக்கும் இன்னொன்று தாய்மரபு அன்பர் உவந்தளிக்கும்
திருவாக்கும் சேர்ந்து பலவாய்த் திரண்டு முதல்பரிசை
உருவாக்கக் கிட்டிடும் உண்மை உழைப்பின் வெகுமதியே!

(பாய் இது நான் எழுதும் இரண்டாவது ககது.)
கதிர் said…
எல்லாம் பெரிய விஷயமா இருக்கு.
திரு ஆசாத்,
ரெம்ப நல்ல முயற்சி. இந்த மாதிரி செய்யும்போதுதான் தமிழ் நிச்சயம் வளர்கிறது..

வாழ்த்துக்கள்.

:)
இனிய தொட்டராயசுவாமி,
நடராஜன் அய்யா,
தம்பி,
சிரில் அலெக்ஸ்,

மிக்க நன்றிகள்.

நடராஜன் அய்யா,

உங்கள் க.க.து.வில் இரண்டாம் அடியில் பதினெட்டு எழுத்துகள் வருகின்றனவே :) பதினேழுதானே வேண்டும்.

//தருவாக்கும் இன்னொன்று தாய்மரபு அன்பர் உவந்தளி*க்கும்*//

க்கும்..க்கும் எடுத்துவிட்டாலும் பொருள் மாறவில்லை, இலக்கணம் பொருந்துகிறது.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

எம்.ஜி.ஆர். படங்களின் பட்டியல்

ஷோபா சக்தியின் பதிவில் தம்பி திரைப்படத்துக்கான விமர்சனத்தில் எம்.ஜி.ஆர். திரைப்படங்களைச் சொல்லும்போது 136 படங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார் (//எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில்...//). சில இடங்களில் 137 என்றும் படித்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் பட்டியல் 134 அல்லது 135 என்று சொல்கிறது. தலைபோகிற காரியம் இல்லைதான், ஆனாலும், இந்தப் பட்டியலைத் தந்து விடுபட்டிருக்கும் அந்த இரண்டு அல்லது மூன்று படங்களின் விவரம் கிடைத்தால் வசதியாக இருக்கும் என்பதால்தான் இந்தப் பதிவு. இப்பட்டியலில் இல்லாத படங்களின் பெயர்கள் நண்பர்கள் பெரியோர்களுக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில் தயைகூர்ந்து விவரம் சொல்லவேண்டுகிறேன். படம் - வருடம் - இயக்குனர் 1. சதிலீலாவதி - 1936 - எல்லீஸார் டங்கன் 2. இரு சகோதரர்கள் - 1936 - எல்லீஸார் டங்கன் 3. தட்ஷயக்ஞம் - 1938 - ராஜா சந்திரசேகர் 4. வீர ஜெகதீஷ் - 1938 - டி.பி.கைலாசம், ஆர்.பிரகாஷ் 5. மாயா மச்சீந்த்ரா - 1939 - ராஜா சந்திரசேகர் 6. பிரஹலாதா - 1939 - பி.என்.ராவ் 7. வேதவதி அல்லது சீதா ஜனனம் - 1941 - டி.ஆர்.ரகுநாத் 8. அசோக்குமார் - 1941 - ராஜா சந்திரசேகர் 9. தமிழ் ...

புத்தகக் கண்காட்சிப் படங்கள்

சசிகுமார் விகடன் பதிப்பு பொன்னியின் செல்வன் பக்கத்துல ரொம்ப நேரமா நிண்ணுக்குனு யார் வந்து பக்கத்துல நிண்ணாலும் போட்டோவுக்கு சிரிச்சுக்குனு இருந்தாரு. இந்தக் கடைல பாபா ராம்தேவ் தமிழ்ல பேசினார். மத்த எந்தக் கடைலயும் இப்படி பதாகை வெச்சு தலைப்ப அடையாளம் காட்டலை. சின்ன அறைல வாழ்நாளக் கழிச்ச பத்திரிகையாளர், நெனச்சாலே பிரமிப்பாத்தான் இருக்கு. க்ளாசிக் கலெக்‌ஷன்னு சொல்றாங்க, சல்தாஹை! நல்ல ஏற்பாடு. ஆளுங்கள தேடிப்புடிச்சு உக்கார வெச்சு கலைக்களஞ்சியம் விக்றாங்க. நம்ம பழைய நண்பர் பிரசன்னாவத் தேடுனேன், அவரு அப்ப கடைல இல்லை. செம கேம்பெய்ன். வருஷாவருஷம் நா.முத்துக்குமாரும் ப்ளக்சுல சிரிச்சுர்ராரு. இங்க பெயர்ப் பலகைல ‘ச்’சலை. ஆனா, இங்க சரியா ‘ப்’பிட்டாய்ங்க. பிரிச்சு வெக்றதுக்கெல்லாம் நேரமில்லை. 3300ரூவா, 3400ரூவா, அப்டியே பண்டலோட தூக்கிக்கினு போய்க்கினே இருக்கணும். இந்த ரூட் மேப் ஒரு காப்பி வாங்கி கைல வெச்சாத்தான் ஆச்சுன்னு அடம் புடிச்சு என்னோட பொண்ணு வாங்கினால்ல. மொத ரவுண்ட் பர்சேஸ். பொன்னியின் செல்வனுக்கு மதிப்பு குடுத்து வாங்கியிருக்கேன்.

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...